Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரம்பு மீறினால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் - பத்திரிகையாளர்களை மிரட்டும் பாஜக தலைவர்

Webdunia
ஞாயிறு, 24 ஜூன் 2018 (10:53 IST)
வரம்பை மீறி செய்தி வெளியிட்டால் நீங்களும் கொல்லப்படுவீர்கள் என ஜம்மு - காஷ்மீர் மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவை சேர்ந்த எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் சர்ச்சைக்குரிய வகையில்  பேசுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் பத்திரிக்கையாளர்களை மிரட்டும் தொணியில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
சமீபத்தில் "ரைசிங் காஷ்மீர்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதுகுறித்து பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் லால் சிங், காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள் செய்திகளை வெளியிடுவதில் ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும் என மிரட்டல் தொணியில் பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments