Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா, பாலாஜி ரீஎண்ட்ரீ!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (11:19 IST)
பிக்பாஸ் வீடு இப்போது கலகலவென காணப்படுகிறது. இன்னும் நான்கு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிய போகிறது மக்களுக்கு. பிக்பாஸ் வீட்டில் இப்போது இருப்பது ரித்விகா, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் மட்டுமே.
இவர்களில் ரித்திகா மற்றும் ஐஸ்வர்யா இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இருவரில் ஒருவர் பிக்பாஸ் சீசன் 2 வெற்றியாளராக வருவதற்கு  அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவின் ஆரம்பகால நாட்கள் மற்றும் ஐஸ்வர்யாவின் ஆரம்பகால  நாட்களை ப்ரோமோவில் போட்டு நினைவு கூர்ந்தார்கள்.
 
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் யாஷிகாவும், பாலாஜியும் ரீஎன்ட்ரீ ஆகி சர்ப்ரைஸ் கொடுத்தனர். யாஷிகா உள்ளே வருவதை கண்டு ஆச்சரியம் அடைந்த ஐஸ்வர்யா ஓடிச்சென்று கட்டி அணைத்து மகிழ்ச்சி அடைந்தார். யாஷிகா தனது இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியதால், வித்தியாசமாக உணர்ந்ததாக தெரிவித்தார். பாலாஜி தனது வீட்டு நாய் தன்னை பார்த்து குரைத்ததாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments