விஜய்மல்லையாவை சந்திக்கவில்லை: அருண்ஜெட்லி மறுப்பு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:43 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில் அவரை இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டைவிட்டு வெளீயேறும்  முன்னர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து எனது நிலைமையை விளக்க முயற்சித்ததாகவும், வங்கிக்கடன் குறித்து அவரிடம் முக்கிய ஆலோசனை செய்ததாகவும் இங்கிலாந்தில் விஜய் மல்லையா பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டி இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய்மல்லையாவின் இந்த பேட்டிக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய்மல்லையாவை நான் சந்தித்ததாக வெளியான தகவல் பொய்யானது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய்மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments