Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாகரன் தொடங்கிய புதிய கட்சி: தினகரனுக்கு போட்டியா?

Webdunia
ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (08:54 IST)
கடந்த சில நாட்களாக சசிகலாவின் உறவினர்களான தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது திடீரென திவாகரன் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
 
தினகரன் இன்னும் ஆறு மாதங்களில் தனிமரமாகிவிடுவார் என்றும், அதிமுகவின் பெரும்பான்மையோர் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியில் இருப்பதாகவும் சமீபத்தில் திவாகரன் பேட்டியளித்தார். இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திவாகரன் உள்பட சசிகலா குடும்பத்தினர் யாரையும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று அதிமுக அறிவித்துவிட்டது.
 
இந்த நிலையில் நேற்று திடீரென மன்னார்குடியில் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் திவாகரன். தினகரனின் அமமுக கட்சிக்க்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த கட்சிக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்று திவாகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அம்மா அணி என்ற புதிய கட்சியில் தலைமை அலுவலகத்தை மன்னார்குடியில் திறந்து வைத்த திவாகரன், 'அம்மா அணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments