Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைந்து செல்ல மறுத்த திமுக தொண்டர்கள் மீது லேசான தடியடி

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (23:07 IST)
திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சையால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருவதால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசா அவர்களும் தொண்டர்களிடையே கலைந்து செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் திமுக தொண்டர்கள் கொட்டும் மழையிலும் கலைந்து செல்ல மறுத்து காவேரி மருத்துவமனை முன்னர் கூடியுள்ளனர்.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி தொண்டர்களை கலைத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டநிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments