Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைத்துறைக்கு தனி வாரியம்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

kadambur raju
Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:18 IST)
கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்லவிருப்பதாகவும், இதற்காக ஏப்ரல் 4ஆம் தேதி பிரமாண்டமான பேரணியுடன் தலைமைசெயலகம் சென்று முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவிருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'திரைப்படத்துறைக்கு என ஒரு தனி வாரியம் தேவைப்பட்டால் தமிழக அரசு அமைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியபோது, 'தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்' என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments