Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை

Webdunia
திங்கள், 7 மே 2018 (16:41 IST)
மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை சிறை பிடித்து, வங்கியில் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸார், அருகிலிருக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
சமீபத்தில் இதே போல் மதுரை இந்தியன் வங்கியில், பட்டப்பகலில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments