Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் வங்கியில் 6 லட்சம் கொள்ளை

Webdunia
திங்கள், 7 மே 2018 (16:41 IST)
மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள்.
 
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் வங்கிக்குள் நுழைந்து, துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை சிறை பிடித்து, வங்கியில் இருந்து 6 லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகையையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீஸார், அருகிலிருக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதிவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
 
சமீபத்தில் இதே போல் மதுரை இந்தியன் வங்கியில், பட்டப்பகலில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments