Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் : இரு ஆசிரியர்கள் கைது

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (18:04 IST)
பிஹார் மாநில தலைநகர் பாட்னாவில்  5-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாட்னாவில் புல்வாரி ஷரிஃப் என்ற இடத்தில் உள்ள  ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவியை அந்த பள்ளியின் முதல்வர் தேர்வு விடைத்தாள் சம்பந்தமாக அவரது தனி அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை வல்லுணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
 
முதலில் அம்மாணவியை வல்லுணர்வு செய்த போது அதை வீடியோ 
எடுத்து வைத்துக்கொண்ட இருவரும் அதைக் காட்டி மிரட்டி தொடர்ந்து மாணவியை வல்லுணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து மாணவிக்கு  வயிற்றில் வலி ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரு  வளர்ந்து வருவதை தெரிவித்துள்ளனர்.அதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
பிறகு மாணவியிடம் இது குறித்து விசாரித்தபோது  பள்ளி ஆசிரியர்கள் இருவர்தான் இந்த கொடூரத்தை நிகழ்த்தியது என்ற உண்மையை தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இரு ஆசிரியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments