Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவன் வருங்கால திருடன்: ஏ.ஆர்.முருகதாஸ்

ஓட்டுக்குப் பணம் கொடுப்பவன் வருங்கால திருடன்: ஏ.ஆர்.முருகதாஸ்
, செவ்வாய், 10 மே 2016 (14:46 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்காக பணம் கொடுப்பவன் வருங்கால திருடன் என்று திரைப்பட இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவு செய்ய வேணடும் என்று தேர்தல் ஆணையம் போராடி வருகிறது. இதற்காக திரையுலக பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்வதோடு, பிரபல சினிமா வசனங்களை மாற்றியமைத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. 
 
இதைத்தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், மே-16ஆம் தேதி ஓட்டுப் போடுவதுதான் முதல் வேலையாக இருக்க வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது அடையாளம் கொள்ளுங்கள், அவன் தான் வருங்கால திருடன் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து நேற்று பிரபுதேவா குரலில் “என்னாத்துக்கு நோட்டு” என்ற பாடலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன நா.ம.க தலைவர் கார்த்திக் : வலைவீசி தேடும் நிர்வாகிகள்