Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் மண்ணை கவ்விய முக்கிய அரசியல் தலைகள்

Webdunia
வியாழன், 19 மே 2016 (17:32 IST)
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய கட்சி பிரமுகர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.


 

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவூர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்தாலும், போகப் போக அதிமுக ஏறுமுகம் காட்டியது. தற்போது அதிமுக 132 இடங்களிலும், திமுக 99 இடங்களிலும் முன்னனியில் உள்ளது.
 
இந்த தேர்தலில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
 
முதலமைச்சர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட ஐந்து பேரில், ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 
 
உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பென்னாகரம்  தொகுதியில் போட்டியிட்ட பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
 
அதேபோல், சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சமக தலைவர் சரத்குமார் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். 
 
அதிமுக சார்பில் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன்,  பாஜக சார்பில் போட்டியிட்ட ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். 
 
இந்த தேர்தலில்தான், அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments