தமிழக தேர்தல் பிரசாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரம் செய்துவருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகமெங்கும் பிரசாரம் செய்துவருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது சர்ச்சையில் மாட்டிகொள்கிறார். கடந்த சில தினங்களுக்குமுன்பு தனது பாதுகாவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார். அப்போது அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பெயரை மாற்றிக் கூறினார். அதாவது ஓ.பி.எஸ் என்ற அவரது பெயரை யூ.பி.எஸ் என கூறினார். பின்னர் தவறை உணர்ந்து ஸாரி ...ஓ.பி.எஸ் என்று மாற்றி கூறினார்.
நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி