Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டி : மூன்று ஓட்டு பதிவு எந்திரங்கள்

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (11:13 IST)
சென்னையில் ஆர்.கே நகர் என்று அழைக்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வாக்குப்பதிவின் போது அங்கு மூன்று ஓட்டு பதிவு எந்திரங்கள் வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் அந்த தொகுதியில் அவரோடு சேர்த்து மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள்.  பொதுவாக ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும்.
 
ஆனால், அந்த தொகுதியில் 45 பேர் போட்டியிடுவதால் மூன்று வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
 
முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பெயரும், அதன்பின் பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள் பெயரும், கடைசியில் சுயேட்சையாக போட்டியிடுபவர்கள் பெயரும் வரிசையாக இடம்பெறும்.
 
இதற்கான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே எடுத்து வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.
 
இதில் ஜெயலலிதாவின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் 4வதாக இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்! மத்திய அரசு

இந்தியா எடுத்த ஒரு சின்ன முயற்சி.. ₹8.5 லட்சம் கோடி முதலீடு, 10 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments