Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐய்யோ.... சொக்கா... தலைசுத்துதே - கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல்

ஐய்யோ.... சொக்கா... தலைசுத்துதே - கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பறிமுதல்

K.N.Vadivel
சனி, 14 மே 2016 (09:10 IST)
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, உரிய ஆவணங்கள் இன்றி, கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 570 கோடியை பறிமுதல் செய்தனர்.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுக்க தேர்தல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில், திருப்பூர் அருகே உள்ள செங்கப்பள்ளியில் இன்று அதிகாலை நேரத்தில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பேது கண்டெய்னர் லாரிகள் வரிசையாக வந்தது. அதை மடக்கி, சோதனையிட்டர். அதில், கட்டுக்கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அந்த கண்டெய்னர் லாரிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
 
அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையில், இந்த பணம் கோவையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் இருந்து ஹைதராபாத்திற்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ரூ 195 கோடிக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் உள்ளதாகவும், மீதி பணத்திற்கு இதுவரை ஆவணங்கள் இல்லை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

உருண்டு வந்த குழாய்கள்.. நொறுங்கிய வாகனங்கள்! தஞ்சாவூரில் ஒரு Final Destination! - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!

உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்… தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு புதிய பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

போர் பதற்றத்தால் பங்குச்சந்தை சரியுமா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments