Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துரோகம் செய்த சந்திரகுமாரை அவரின் குடும்பமே மன்னிக்காது : பிரேமலதா அதிரடி

துரோகம் செய்த சந்திரகுமாரை அவரின் குடும்பமே மன்னிக்காது : பிரேமலதா அதிரடி
, சனி, 30 ஏப்ரல் 2016 (17:07 IST)
தேமுதிகவிற்கு துரோகம் செய்த துரோகி சந்திரகுமாரை, அவரின் குடும்பம் கூட மன்னிக்காது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.


 

 
பிரேமலதா தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று அவர் ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார்.  நேற்று இரவு அவர் ஈரோடு கிழக்கு தொகுதி தேமுதிக வேட்பாளை ஆதரித்து பேசினார்.
 
அப்போது, தேமுதிகவிலிருந்து விலகிய சந்திரகுமாரை கடுமையாக தாக்கி பேசினார்.
 
அவர் கூறும்போது “ எதிரிகளை கூட கேப்டன் மன்னித்து விடுவார். ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார். தேமுதிகவிற்கு துரோகம் செய்த சந்திரகுமார் ஈரோட்டை சேர்ந்தவர்தான்.
 
‘அண்ணி’  ‘அண்ணி’ என்று அழைத்த ஒரு ஓடுகாலி தேமுதிகவிற்கு துரோகம் செய்தது. அவரை ஈரோட்டில் கூட யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்டவருக்கு கொள்கை பரப்புச் செயலாலர் ஆக்கி, எம்.எல்.ஏ ஆக்கி சட்டசபையில் ‘கொறடா’ ஆக்கி ஒரு அடையாளம் கொடுத்தவர் கேப்டன்.
 
ஆனால், அவருக்கே சந்திரகுமார் துரோகம் செய்தார்.  அவரை எங்கள் வீட்டுப்பிள்ளை போல் நினைத்தோம். ஆனால் பணத்திற்கு விலை போய் எங்கள் முதுகில் குத்தி விட்டார். அவரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஏன்? அவரின் குடும்பமே அவரை மன்னிக்காது.
 
ஈரோட்டில் அவருக்கு டெபாசிட் கூட கிடைக்காது. கேப்டனை எதிர்த்தவர்கள் கொட நாட்டு ராணியாக இருந்தாலும் சரி, துரோகிகளாக இருந்தாலும் சரி.. அவர்கள் வெற்றி பெற்றதாய் சரித்திரம் இல்லை” என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போடியில் ஓ.பி.எஸ். பணம் பட்டுவாடா; செய்தி சேகரித்த நிருபர் தாக்கப்பட்டதாக ராமதாஸ் புகார்