Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெயிலில் பரப்புரைக் கூட்டம் நடத்தக் கூடாது : தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (20:20 IST)
கடும் வெயிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.


 

 
சட்டமன்ற தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட சில கூட்டங்களில், கடும் வெயில் காரணமாக நான்கு பேர் உயிரிழக்க நேர்ந்தது. எனவே, வெயில் நேரத்தில் தேர்தல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில், கடும் வெயிலில் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், வெயிலில் இருந்து மக்களை காக்க நிழற்கூறையும், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
 
பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

அரசு அதிகாரியை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கிய பாஜக பிரமுகர்.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments