Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 ஆம் தேதி மக்கள் நல கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்: திருமாவளவன்

13 ஆம் தேதி மக்கள் நல கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்: திருமாவளவன்
, வியாழன், 10 மார்ச் 2016 (09:33 IST)
மக்கள்நல கூட்டணியின் தொகுதி பங்கீடு இம்மாதம் 13 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, தேமுதிக வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
 
அப்போது மோடி அலை வீசிய போதும் பாஜக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது. மீதி 37 தொகுதிகளில் தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில் மீண்டும் பாஜக வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
பிரகாஷ் ஜவடேகர் கூறிய கருத்துக்கு விஜயகாந்த் என்ன முடிவு எடுப்பார்?, அவர் என்ன கருத்து சொல்கிறார்? என்பதற்கு பிறகு மக்கள் நல கூட்டணி தனது முடிவை அறிவிக்கும்.
 
13 ஆம் தேதி மக்கள்நல கூட்டணி சார்பில் வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் மக்களை சந்தித்த பிறகு 4 தலைவர்களும் ஒன்று கூடி தொகுதி பங்கீடு பற்றி பேசி முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil