Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிறிஸ்தவர் முன்னனி 80இடங்களில் தனித்து போட்டி - எம்.எல்.சுந்தரம்

Webdunia
திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:12 IST)
வருகின்ற 2016 தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  சட்டமன்றத்  தேர்தலில், இந்திய கிறிஸ்தவர் முன்னணி 80 இடங்களில் தனித்து போட்டியிடுகின்றது. முதல்கட்டமாக , வருகின்ற ஏப்ரல் 15 -ஆம் தேதி, தமிழகத்தில் கிறிஸ்தவர் அதிகம் வாழும் 34தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் கிறிஸ்தவர் அதிகம் வாழும்12 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.


 

இது தொடர்பாக இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் தலைவர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியதாவது :

எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில்,தமிழகத்தில் களம் காணும் எந்தவொரு பிரதானக் கூட்டணியும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கவுரவமான தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை.கடந்துவந்த தேர்தல்களில் கிறிஸ்தவர்களை வெறுமனே வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் தூக்கி எறிந்துவிடுகின்றனர். எனவே இம்முறை இந்தியகிறிஸ்தவர் முன்னணி' 80  இடங்களில் (தமிழகம்  மற்றும் புதுவை) தனித்து போட்டியிடுகின்றது. வருகின்ற ஏப்ரல் 15ஆம்  தேதி, முதல்கட்டவேட்பாளர்பட்டியல் வெளியிடப்படும் அத்துடன்தேர்தல்சின்னமும் அறிமுகப்படுத்தப்படும் " எனத் தெரிவித்துள்ளார் .

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

Show comments