Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால் திருமாவளவன் தோற்கவில்லை : சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் பேட்டி

என்னால் திருமாவளவன் தோற்கவில்லை

Webdunia
சனி, 21 மே 2016 (11:38 IST)
காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல். திருமாவளவன் தோல்வி அடைந்ததற்கு நான் காரணமில்லை என்று அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அந்த தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 48.363 ஒட்டுகள் பெற்றார். ஆனால் அவரை விட அதிமுக வேட்பாளர் 87 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
 
இந்நிலையில், அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட திருமாவளவன் என்பவவர் 289 வாக்குகள் பெற்றிருந்தார். வேண்டுமென்றே ஒரே பெயரில் மற்றொரு வேட்பாளரை நிறுத்தி, பெயர் குழப்பம் காரணமாகவே தொல். திருமாவளவன் பெற வேண்டிய ஓட்டுகளை, சுயேட்சை திருமாவளவன் பெற்று விட்டதாக கூறப்பட்டது. ஆனால், சுயேட்சை திருமா அதை மறுத்துள்ளார்.
 
அவர் கூறும்போது “தொல்.திருமாவளவன் தோற்றதற்கு நான் காரணமில்லை. அவருக்கு முன்பாகவே காட்டுமன்னார் கோவில் தொ குதியில் நான் பிரச்சாரத்தை துவங்கி விட்டேன். யாருடைய தூண்டுதலிலும் நான் போட்டியிடவில்லை. 
 
எனக்கு ஏராளமான கொலை மிரட்டல் வந்தது. அதனால், வாக்கு சேகரிப்பில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். ஒருவேளை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments