Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு : ராஜேஷ் லக்கானி தகவல்

Webdunia
திங்கள், 28 மார்ச் 2016 (17:55 IST)
தேர்தல் நடத்தி விதிகளை மீறி செயல்பட்டதாக, பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.


 

 
சமீபத்தில், தேமுதிக சார்பில் நெல்லையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா “அதிமுக, திமுக கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், ஓட்டுக்கு ஒரு லட்சம் கேளுங்கள்” என்று பேசினார். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜேஷ் லக்கானி “ பிரேமலதா அப்படி பேசியது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். அதேபோல், தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
 
அவர் மேலும் கூறுகையில் “வாக்குச்சாவடிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும். தமிழகத்தில் இதுவரை ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 95 சதவீத பணம், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது” என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments