Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதியமான் கோட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

அதியமான் கோட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை

அதியமான் கோட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை
, திங்கள், 25 ஏப்ரல் 2016 (06:05 IST)
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அதியமான் கோட்டையில் அதிமுக பிரமுகர் மணிமாறன் என்பவர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதி அதியமான் கோட்டை உள்ளது. இந்த பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் மணிமாறன் என்பவருக்கு சொந்தமாந பன்னை வீடு உள்ளது. இந்த வீட்டில் பல கோடி ரூபாய் பதுக்கி உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு ரகசிய புகார் கிடைத்தது. இதனையடுத்து,  தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மணிமாறன் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தரப்பு தெரிவிக்க முன்வரவில்லை.
 
இதனால், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என நடுநிலையாளர்கள் அச்சம்  தெரிவித்துள்ளனர். 


Share this Story:

Follow Webdunia tamil