Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன நா.ம.க தலைவர் கார்த்திக் : வலைவீசி தேடும் நிர்வாகிகள்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (14:15 IST)
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் ஆன கார்த்திக் எங்கு இருக்கிறார் என்று அவரின் கட்சி நிர்வாகிகள் தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கார்த்திக்கின் நா.ம.கட்சி, சிவசேனா மற்றும் தமிழக மக்கள் கட்சியுடன் சேர்ந்து ‘விடியல் கூட்டணி’ அமைத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 50 இடங்களில் போட்டியிடுகிறது.
 
அந்த தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்று கார்த்திக் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், நா.ம.கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், அவர் பிரச்சாரத்திற்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் நேற்று வரை அவர் வரவில்லை.
 
நா.ம.க போட்டியிடும் 13 தொகுதிகளில் 5,000 முதல் 10 ஆயிரம் வரையிலான ஓட்டுகளை அவர்கள் பெறக்கூடும். இதனால், அங்கு போட்டியிடும் திமுக, அதிமுக கட்சிகளுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இதனால் நா.ம. கட்சியினரை சரிகட்டும் வேலையில் அந்த கட்சிகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
 
இது கார்த்திக்கு தெரிய வர அப்படியே மாயமாகி விட்டாராம். அவர் எங்கிருக்கிறார் என்று அவரது கட்சி நிர்வாகிகளுக்கு கூட தெரியவில்லையாம். அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் பலர், கட்சியிலிருந்து விலகும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 
நடிகர் கார்த்திக்கை ஷூட்டிங்கிற்கு கூட்டி வருவதும், மீட்டிங்கிற்கு கூட்டி வருவதும் மிகவும் கடினம் என்று கமெண்ட் அடிக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments