Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பின்னர் திமுகவே இருக்காது… எல் முருகன் கருத்து!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:42 IST)
நடக்க இருக்கும் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது என்று பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பாஜக மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை முக்கியத் தலைவர்களை பிரச்சாரத்துக்காக இறக்கியுள்ளது. யோகி வந்த போது கோவையில் நடந்த பேரணியில் வன்முறை சம்பவங்கள் நடந்தது பாஜக மீது விமர்சனத்தை எழுப்பியுள்ளன.

இந்நிலையில் தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல் முருகன் ‘கோவை நடந்த தாக்குதலில் பாஜக மீதான புகார் தவறானது. பிரதமர் மோடி மிகப்பெரிய அளவிலான வெற்றியை தமிழகத்தில் தேடித் தரப் போகிறார். ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார். தேர்தலுக்கு பின் தமிழகத்தில் திமுக என்ற கட்சியே இருக்காது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments