Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொன்னதைதான் பிரதமரும் இப்போது சொல்கிறார்… கிச்சா சுதீப் கருத்து!

Webdunia
சனி, 21 மே 2022 (10:09 IST)
நடிகர் கிச்சா சுதீப் சில நாட்களுக்கு முன்னதாக இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கின.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப், பேன் இந்தியா திரைப்படங்கள் குறித்து பேசினார். அப்போது அவர், இனி இந்தி தேசிய மொழி இல்லை என்று பேசியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன் “இந்தி தேசிய மொழி இல்லை எனில் ஏன் உங்கள் படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள்.” என வாக்குவாதம் செய்யும் விதமாக கேட்டிருந்தார்.

இதற்கு கிச்சா சுதீப் ஒரு பக்கம் பதிலளிக்க, இணையத்தில் தென்னிந்திய ரசிகர்கள் அஜய் தேவ்கனைக் கடுமையாக விமர்சித்தும், அவரின் முட்டாள்தனமாக கருத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி”இந்திய மாநிலங்கள் அனைத்தின் மொழியும் நமது அடையாளம்தான். சமீபகாலமாக சிலர் மொழியை வைத்து பிரச்சனையக் கிளப்ப பார்க்கிறார்கள்” என்று கூறியிருந்தனர்.

இதையடுத்து பிரதமரின் இந்த கருத்தைப் பகிர்ந்துள்ள கிச்சா சுதீப் “நான் சொன்னதைதான் இப்போது பிரதமரும் பிரதிபலிக்கிறார்” என்று கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவதா? வைரலான வீடியோ குறித்து ஆலியா பட் கண்டனம்!

ஹோம்லி லுக்கில் அசத்தல் புகைப்படத் தொகுப்பை பகிர்ந்த எஸ்தர் அனில்!

ரெஜினாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

50 ஆண்டுகள் கதாநாயகனாக நடித்த பாலகிருஷ்ணா… புதிய சாதனை!

மீண்டும் இணைந்து நடிக்கும் கார்த்தி & ஜெயம் ரவி… இயக்குனர் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments