Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐந்து பேரும் ஐடி கம்பெனியும்

ஐந்து பேரும் ஐடி கம்பெனியும்
, வியாழன், 26 மார்ச் 2015 (16:29 IST)
படத்தின் பெயரைப் போல் இருந்தாலும், ஐந்து பேரும் ஐடி கம்பெனியும் என்பது, யூகன் படத்தின் ஒன் லைன். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஐந்து பேர்களின் எண்ணிங்களை நகைச்சுவையுடன் சொல்லும் திகில் படம் இது.
 
கமல் குமார் என்பவர் படத்தை தயாரித்து இயக்குகிறார். எடிட்டிங்கும் அவரே. படம் குறித்து கேட்டபோது,
 
"இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் புதுசா இருக்கணும் என்பதற்காக புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளேன். இப்படத்தின் ஒளிப்பதிவை ரவி அறுமுகம் செய்திருக்கிறார். ரஷான்ந் அரவிந்த் இசையில் 3 பாடல்கள் உருவாகியிருக்கின்றன. அலெக்ஸ் பிரமானந்த் படத்தின் திகில் காட்சிக்கான பணியை செய்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் திகில் காட்சிகள் அதிகம் பேசப்படும். இதற்காக ஒன்றரை மாதம் மிகவும் கஷ்டப்பட்டு செய்திருக்கிறார்.
 
இப்படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் பாதி நேரம் ஐ.டி பெண்ணாகவும், மீதி நேரம் பேயாகவும் நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி வரை ஹீரோ யார் என்றே தெரியாது. நான் இப்படத்திற்கு எடிட்டிங்கும் செய்திருக்கிறேன். இது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். இப்படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். அபிராமி ராமநாதன் இப்படத்தை வெளியிடுகிறார்" என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil