இந்த பைத்தியக்காரத்தனம் நல்லவேளை தமிழ்நாட்டில் நடக்கவில்லை. விஷயம் நடந்தது மத்திய பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில்.
ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் தீபாவளியையொட்டி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் 21 வயதான இளம் பெண். தன்னை படத்துக்கு அழைத்துச் செல்லும்படி கணவரிடம் கேட்டிருக்கிறார்.
தியேட்டரில் கூட்டம் அதிகமாக உள்ளது என்று கணவன் மனைவியை படத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. ஹேப்பி நியூ இயர் பார்க்க முடியாத விரக்தியில் ஹேப்பி டெத் டே கொண்டாட ஆசைப்பட்டு ஆசிட் குடித்துள்ளார்.
குடலெல்லாம் கருகிய நிலையில் தற்போது குவாலியர் மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை எடுத்து வருகிறார்.