Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட்டு காட்டிய கௌதம்

Webdunia
புதன், 28 ஜனவரி 2015 (08:49 IST)
இன்னும் ஒரு வாரம் போனால் என்னை அறிந்தால் படத்தை திரையில் கண்டு ரசிக்கலாம். ஆனால் அதுவரை ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் கதையை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் அதுதான் பிரதான கேள்வியாக இருந்தது.
படத்தின் கதை என்ன?
 
கதையை உடனே சொல்வதற்கு கௌதம் ஒன்றும் எஸ்.ஜே.சூர்யா அல்லவே. ஆனால், கொஞ்சம் கோடிட்டு காட்டினார்.
 
அஜீத்தின் அம்மாவின் விருப்பம், அவர் மருத்துவராக வேண்டும் என்பது. ஆனால் காலம் அவரை வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. இந்தப் பயணத்தில் இரு பெண்கள் - ஒருவர் டான்சர் இன்னொருவர் ஐடி ஊழியர் - அஜீத்தின் வாழ்க்கையில் கடந்து போகிறார்கள். இதுதான் என்னை அறிந்தால் படத்தின் கதை என்றார்.
 
உங்களால் ஏதாவது யூகிக்க முடிகிறதா? சரி, விடுங்கள். ஃபெப்ரவரி 5 தியேட்டரில் பார்த்துக் கொள்ளலாம்.

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

Show comments