Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட்டு காட்டிய கௌதம்

என்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட்டு காட்டிய கௌதம்
, புதன், 28 ஜனவரி 2015 (08:49 IST)
இன்னும் ஒரு வாரம் போனால் என்னை அறிந்தால் படத்தை திரையில் கண்டு ரசிக்கலாம். ஆனால் அதுவரை ரசிகர்கள் தாங்க மாட்டார்கள் போலிருக்கிறது. படத்தின் கதையை அறிந்து கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வம் காட்டுகின்றனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் அதுதான் பிரதான கேள்வியாக இருந்தது.
படத்தின் கதை என்ன?
 
கதையை உடனே சொல்வதற்கு கௌதம் ஒன்றும் எஸ்.ஜே.சூர்யா அல்லவே. ஆனால், கொஞ்சம் கோடிட்டு காட்டினார்.
 
அஜீத்தின் அம்மாவின் விருப்பம், அவர் மருத்துவராக வேண்டும் என்பது. ஆனால் காலம் அவரை வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. இந்தப் பயணத்தில் இரு பெண்கள் - ஒருவர் டான்சர் இன்னொருவர் ஐடி ஊழியர் - அஜீத்தின் வாழ்க்கையில் கடந்து போகிறார்கள். இதுதான் என்னை அறிந்தால் படத்தின் கதை என்றார்.
 
உங்களால் ஏதாவது யூகிக்க முடிகிறதா? சரி, விடுங்கள். ஃபெப்ரவரி 5 தியேட்டரில் பார்த்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil