“பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது”

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (10:50 IST)
‘பிரபுதேவா இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது’ என இயக்குநர் ரெமோ தெரிவித்துள்ளார்.
 
 
ரெமோ டி' ஸோஸா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த படம் ‘எனிபடி கேன் டான்ஸ்’ (ஏபிசிடி). பிப்ரவரி மாதம் 2013ஆம் ஆண்டு  வெளியான இந்தப் படம், ஏகப்பட்ட வசூலைக் குவித்தது. எனவே, இதன் இரண்டாம் பாகம், 2015ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து வருண் தவான், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது, இதன்  மூன்றாம் பாகம் உருவாக இருக்கிறது.
 
“பிரபுதேவாவைத் தவிர்த்துவிட்டு இந்தப் படத்தை நினைத்துகூடப் பார்க்க முடியாது. மூன்றாம் பாகத்திலும் அவர் இருக்கிறார். மைக்கேல் ஜாக்சனுக்குப் பிறகு நடனத்தின் நுட்பங்களை பிரபுதேவாவிடம் தான் பார்க்கிறேன். முதல் பாகம் எடுத்தபோது  மொழியைப் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டப்பட்டார். ஆனால், இப்போது அந்தப் பிரச்னை இல்லை” என்கிறார் இயக்குனர்  ரெமோ.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments