Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் நடிக்க வருகிறாரா சிவகுமார்…. ராஜு முருகனின் திட்டம் பலிக்குமா?

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:41 IST)
இயக்குனர் ராஜு முருகன் சிவகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது.

குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.  இவர் கடைசியாக நடிகர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இப்போது இவர் தனது பாதையை மாற்றிக்கொண்டு முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு முன்னதாக அவர் எழுத்தாளர் ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று அதற்கான வேலைகளில் இறங்கியதாக சொல்லப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகுமாரை நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தாராம். சிவகுமார் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அந்த திட்டத்தை ராஜு முருகன் தள்ளிவைத்து விட்டு கார்த்தி படத்தில் கவனம் செலுத்துகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

தொடரும் ‘இட்லி கடை’ நட்பு.. அருண் விஜய்க்காக குரல் கொடுத்த தனுஷ்!

பிரசாந்திடம் அந்த நல்ல குணம் உள்ளது.. நான் அவரோடு மட்டுமே நட்பில் உள்ளேன் -புகழ்ந்த பிரபல நடிகை

அடுத்த கட்டுரையில்
Show comments