Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரம்பிக்கும்போதே கண்ணைகட்ட வச்சிட்டாங்களே...

ஆரம்பிக்கும்போதே கண்ணைகட்ட வச்சிட்டாங்களே...
, வியாழன், 29 டிசம்பர் 2016 (13:05 IST)
வடிவேலு நடிக்கும் படத்தை ஷங்கர் விரைவில் இயக்குகிறார் என்ற செய்தியை படித்து மகாஜனம் இன்னும் அதிர்ச்சியில்  இருந்து மீளவில்லை. இந்த தவறு எப்படி நடந்தது?

 
பிரபல நாளிதழ் வடிவேலுவை பேட்டிகண்டபோது, ஷங்கர் 2.0 படத்தில் பிஸியாக இருப்பதால் இம்சை அரசன் படத்தின்  இரண்டாம் பாகம் தொடங்க தாமதமாவதாக கூறியிருக்கிறார். இம்சை அரசனை இயக்கிய சிம்புதேவனே இரண்டாம்  பாகத்தையும் இயக்குகிறார். ஷங்கரும், லைக்காவும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.
 
ஷங்கரால் தாமதமாகிறது என்றதும், ஷங்கர்தான் இம்சை அரசனின் இரண்டாவது பாகத்தை இயக்குகிறார் என்று  பேட்டிகண்டவர் எழுத, எக்குதப்பாகிவிட்டது.
 
ஆரம்பிக்கும் முன்பே கண்ணைகட்ட வச்சிட்டீங்களே...
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2016 தமிழ் சினிமாவில் ரீமேக்குகள்