Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சினிமாவில் இருந்து விலகுவேன்… சகநடிகரிடம் சொல்லிய அஜித் – ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:24 IST)
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருந்து வரும் அஜித் இன்னும் சில சினிமாக்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லொள்ளு சபா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற லொள்ளு சபா சாமிநாதன் சமீபத்தில் ஒரு நேர்காணல் அளித்திருந்தார். அதில் தான் கூட சேர்ந்து நடித்த நடிகர்களுடனான அனுபவம் பற்றி கூறிய அவர் அஜித்தைப் பற்றி ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேர்காணலில் ‘விவேகம் படத்தின் போது நான் அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தோல் மேல் கைபோட்டுக் கொண்டு அஜித் நீங்கள் எத்தனைப் படங்களில் நடித்திருப்பீர்கள்? எத்தனை ஹீரோக்களோடு நடித்திருக்கிறீர்கள்?’என என்னைப் பற்றி விசாரித்தார். அதற்கு நான் ’500 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன் சார்’ என சொன்னேன். பின்னர் அஜித் சார் ’நான் இன்னும் சில படங்களில் மட்டுமே நடிக்க இருக்கிறேன். நான் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வதற்கு முன்னால் நானாகவே வெளியேறிவிட வேண்டும் என நினைக்கிறேன் எனக் கூறினார்.’ நான் உடனே ’சார் அப்படி எல்லாம் செய்து விடாதீர்கள் உங்கள் ரசிகர்கள் உங்கள் படத்துக்காக காத்துக் கிடக்கிறார்கள்’ எனக் கூறினேன்.’ எனப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments