Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பா ???

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (16:27 IST)
நடிகர் விஜய்  சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் தியேட்டரில் 50% பார்வையாளர்களிலிருந்து எண்ணிக்கையை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனால் தமிழகத்திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் துளரிக்கவுள்ளதாக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். நடிகர் தனுஷும் விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தியேட்டரில் மாஸ்டர் படம் பார்க்குமாறு கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாட்டுகளின்படி  வரும்  ஜனவரி 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் திரையரங்குகளுக்கான கூடுதல் இருக்கைகளுக்கான அனுமதி 50% லிருந்து 100% உயர்த்துதல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு தளங்களில் பணிபுரிவோர் எண்ணிக்கை உச்சவரம்பு எண்ணிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.

எனவே விஜய்யின் கோரிக்கை நிராகரிக்கபட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுக்கான அனுமதி 50% லிருந்து 100% உயர்த்துதல் பற்றி தனி அறிவிப்பு வெளியாகலாம் என விஜய் ரசிகர்கள் மற்று சினிமாதுரையினரும் திரையரங்க உரிமையாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments