Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்? விஜய் தரப்பு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:20 IST)
நடிகர் விஜய் இன்று காலை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சைக்கிளில் வந்தது சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். விஜய் நீலாங்கரையில்  உள்ள வாக்குச்சாவடிக்கு  வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர். 

ஆனால் இதுகுறித்து விஜய் தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் ‘ வாக்குச்சாவடி அமைந்த இடம் விஜய்யின் வீட்டுக்குப் பின்னரே இருந்தது. அந்த தெரு குறுகலான தெரு என்பதால் காரில் சென்று வரமுடியாது என்பதால்தான் சைக்கிளில் சென்றார்.’ என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments