Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷங்கருக்கு கற்பனை வறட்சியா? திடீர் முடிவின் பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (15:50 IST)
இயக்குனர் ஷங்கர் தனது புதிய படத்துக்கான கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் இருந்து வாங்கியுள்ளாராம்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை தற்போது தொடங்க உள்ளார்.

இந்த படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி கொடுத்துள்ளாராம். இதுவரை ஷங்கர் படத்துக்கு அவரேதான் கதை எழுதுவார். ஆனால் முதல் முறையாக வேறொருவரின் கதையை அவர் படமாக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் கதை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கரின் இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தியன் பட பிரச்சனைகளால் மன உளைச்சலில் இருந்த ஷங்கர், யோசித்து கதை முடியாத சூழலால் கார்த்திக் சுப்பராஜிடம் தனது படத்துக்கு கதை கேட்டு வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கதைக்கு திரைக்கதை வசனம் எல்லாம் அவர்தான் எழுதுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments