Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராசக்தி படத்தின் ஷூட்டிங் இலங்கையில் நடத்தப்பட காரணம் இதுதானா?

vinoth
சனி, 22 மார்ச் 2025 (16:04 IST)
சூர்யா நடிப்பில் உருவாக இருந்து கைவிடப்பட்ட புறநானூறு கதையை இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ’பராசக்தி’ என்ற பெயரில் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்கி வருகிறார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய வேடங்களில் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

தற்போது இலங்கையில்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு முன்னோட்ட வீடியோவும் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனம் பெற்றது. இந்த படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

தற்போது இலங்கையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிய கதைக்களத்தை எதற்காக இலங்கையில் படமாக்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கானக் காரணம் என்னவென்றால் படத்தில் நீராவி எஞ்சின் ரயில் சம்மந்தமான முக்கியமானக் காட்சிகளை இலங்கையில் படமாக்குகிறார்களாம். இலங்கையில் தற்போதும் நீராவி எஞ்சின் ரயில் இயங்குவதால் அங்கு படம்பிடிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments