தொடரி படம் வெளிவந்த போது படத்தைவிட கீர்த்தி சுரேஷின் பாவாடைதான் அதிகம் பேசப்பட்டது. 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலின் மிது நிற்கும் கீர்த்தி சுரேஷின் பாவாடை ஏன் பறக்கவில்லை என்று ஒரு அறிவியல்பூர்வமான கேள்வியை வாட்ஸ் அப் சயினட்டிஸ்ட் எழுப்ப, அது வைரலானது.
மாவீரன் கிட்டு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபனும் இந்த பாவாடை மேட்டரை விடவில்லை.
"இப்போது சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால்கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு தொடரி திரைப்படத்தில் 150 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது" என்றார்.
ரசிகர்கள் புத்திசாலிகள், அவர்களின் பார்வை நாயகியின் பாவாடைவரை பாயும் என்பதை படம் எடுப்பவர்கள் புரிந்து கொண்டால் சரி.