Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த நடிகருக்கான தேசிய விருது…. இரண்டு பேருக்கு வழங்கியது ஏன் ? கங்கை அமரன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (12:44 IST)
67 ஆவது தேசிய விருதுகள் திரைப்பட கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்குழுவில் இருந்த கங்கை அமரன் இரண்டு நடிகர்களுக்கு விருது அளிக்கப்பட்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

2019ஆண்டிற்கான 67 ஆவது தேசிய விருதுகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த படத்திற்கான தேசிய விருதுஅசுரன் படத்திற்கும் இதில் நடித்த  தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. அதே போல சிறந்த இசையமைப்பாளர்(பாடல்கள்) பட்டியலில் விஸ்வாசம் படத்துக்காக இமானுக்கு விருதுகள் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு மட்டும் இல்லாமல் போன்ஸ்லே என்ற படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய்க்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான கங்கை அமரன் ‘நிறைய போட்டி இருந்ததால் இரண்டு நடிகர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மனோஜ் பாஜ்பாயும் சிறப்பாக நடித்திருந்தார். அவருக்கும் விருது வழங்கலாம் என விருதுக்குழு தலைவர் கூறினார்’ என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடை மற்றும் மேக்கப்பில் அசத்தும் யாஷிகா ஆனந்த்!

வித்தியாசமான உடையில் அசத்தல் ஃபோட்டோஷூட் நடத்திய ஸ்ரேயா!

ஒரே ஆண்டில் 600 கோடி ரூபாய் வசூல்… மலையாள சினிமாவில் சாதனைப் படைத்த மோகன்லால்!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அப்பா இயக்குனர்தான… அப்புறம் ஏன் இட்லிக்கு கஷ்டப்பட்டீங்க? – தனுஷ் அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments