சசிகுமாரின் கிடாரி படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் நல்ல கலெக்ஷனை பெற்றுள்ளது. சசிகுமாரின் வழக்கமான கிராமத்து வன்முறை படம் என்பதால் படத்தை விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
சிலர், இதெல்லாம் ஒரு படமா என்று விமர்சனத்தைத் தாண்டி தனிநபர் தாக்குதலிலும் இறங்கினர். அப்படியிருந்தும் சென்னையில் ஒரு கோடி ரூபாய் ஒபனிங்கை பெற்றது கிடாரி. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் ஓபனிங்கே சென்னையில் 97 லட்சங்கள்தான்.
பி, சி சென்டர்களிலும் கிடாரிக்கு நல்ல கலெக்ஷன். தயாரிப்பாளராக சசிகுமாரின் பாக்கெட் கிழியவில்லை என்பதே பெரும் ஆறுதல். லாபம் நிச்சயம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் தரப்பில்.
விமர்சகர்களின் ரசனைக்கும், மக்களின் ரசனைக்கும் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம்... கிடாரி வெற்றி அதைத்தான் காட்டுகிறது.