நடிகர் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் - கோல்டி பிரார் மிரட்டல்

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (20:43 IST)
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை நிச்சயம் கொல்வோம் என்று கோல்டி பிரார் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மும்பையில் உள்ள பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார்.  கடந்த மார்ச் மாதம் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்தது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் ஆகிய  இருவர் மீது மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  கோல்டி பிரார் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  நடிகர் சல்மான் கானை நிச்சயம் கொலை செய்வோம் என்று கூறியுள்ளார்.

சல்மான் கானை மன்னிக்க மாட்டேன் என்றும் அவரை கொல்வது என் வாழ்க்கையின் லட்சியம் என்று கூறிய லாரன்ஸ் பிரார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோல்டி பிரார் சல்மான் கானை கொல்வேன் என்று கூறியது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments