Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யட்சன் இரு புறம்போக்குகளின் கதை

யட்சன் இரு புறம்போக்குகளின் கதை
, செவ்வாய், 5 மே 2015 (15:06 IST)
யட்சன் எப்படிப்பட்ட படம் என்று முதல்முறையாக பேசியிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
"யட்சன் இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை. இரண்டு புறம்போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பை பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும். 
 
ஐந்தாவது முறையாக ஆர்யாவை நாயகனாக்கி இப்படத்தை எடுத்துள்ளேன். ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும்போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா, முடிந்ததா என்று தோன்றாது. அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல்.
webdunia

அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார். அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. முதன்முதலில் என் தம்பி கிருஷ்ணாவை வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி" 
 
- என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil