Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இணையும் மருது கூட்டணி…. விஷால் ஓகே சொன்ன பின்னணி!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (08:20 IST)
இயக்குனர் முத்தையா இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஷால் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இந்நிலையில் அடுத்து அவர் இயக்கும் படத்தில் நடிக்க விஷால் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இவர்கள் இருவரும் ஏற்கனவே மருது என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். விஷால் இப்போது நிறைய நிதி நெருக்கடியில் இருப்பதால் வரிசையாக படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் முத்தையா சொன்ன கதைக்கு உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதை பொருள் வழக்கு… நடிகர் கிருஷ்ணா தப்பியோட்டம்?

சிம்பு 50 படம் தாமதம்… மணிகண்டனை இயக்குகிறாரா தேசிங்கு பெரியசாமி?

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments