Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் செய்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது- கோபம் தணியாத விஷால்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:17 IST)
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். லண்டனில் நடந்த படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். மேற்கொண்டு படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனர் மிஷ்கின் விஷால் மேல் இருக்கும் கோபத்தை மறந்து பல நேர்காணல்களில் விஷாலை தம்பி மாதிரி என பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் விஷால் இன்னமும் மிஷ்கின் மேல் கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. விரைவில் ரிலீஸ் ஆக வுள்ள அவரின் லத்தி படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட அவரிடம் மிஷ்கின் பற்றி பேசிய போது ”நான் அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. அவர் மிகச்சிறந்த இயக்குநர்தான். ஆனால் ஒரு தயாரிப்பாளராக என்னால் அவர் செய்த துரோகத்தை மறக்க முடியாது.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments