Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது - மீண்டும் ஒரு சாதி மையப்படம்?

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (12:42 IST)
சுசீந்திரனின் பாயும் புலி படத்தை முடித்த விஷால், பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்பாத இந்தப் படத்துடன் முத்தையா இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு மருது என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
முத்தையாவின் முதல் படம், குட்டிப்புலி அப்பட்டமான சாதி அபிமான படமாக வெளியானது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வீரர்களாகவும், அவர்களின் அடாவடிகளை வீரத்தின் அடையாளமாகவும் இப்படம் சித்தரித்தது. 
 
முத்தையாவின் இரண்டாவது படம், கொம்பனின் கதைக்களமும் அதே சாதியைச் சேர்ந்ததால் படம் வெளிவரும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. குட்டிப்புலி அளவுக்கு இல்லை எனினும், கொம்பனும் ஓரளவுக்கு வன்முறையை தூக்கிப் பிடிக்கவே செய்தது. 
 
இந்நிலையில் தனது மூன்றாவது படத்துக்கு மருது என்று பெயர் வைத்துள்ளார். மருது என்றதும் யாரும் சொல்லாமலே நமக்கு நினைவு வருவது பாண்டியர் என்ற வார்த்தை. இந்தப் படமும் முத்தையாவின் சுயசாதி பெருமையாக இருக்குமா என்ற கேள்வியை இந்தப் பெயர் உருவாக்கியுள்ளது.

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments