Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது - மீண்டும் ஒரு சாதி மையப்படம்?

முத்தையா இயக்கத்தில் விஷால் நடிக்கும் மருது - மீண்டும் ஒரு சாதி மையப்படம்?
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (12:42 IST)
சுசீந்திரனின் பாயும் புலி படத்தை முடித்த விஷால், பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்பாத இந்தப் படத்துடன் முத்தையா இயக்கும் படத்திலும் அவர் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்கு மருது என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
முத்தையாவின் முதல் படம், குட்டிப்புலி அப்பட்டமான சாதி அபிமான படமாக வெளியானது. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வீரர்களாகவும், அவர்களின் அடாவடிகளை வீரத்தின் அடையாளமாகவும் இப்படம் சித்தரித்தது. 
 
முத்தையாவின் இரண்டாவது படம், கொம்பனின் கதைக்களமும் அதே சாதியைச் சேர்ந்ததால் படம் வெளிவரும் முன்பே எதிர்ப்புகள் கிளம்பின. குட்டிப்புலி அளவுக்கு இல்லை எனினும், கொம்பனும் ஓரளவுக்கு வன்முறையை தூக்கிப் பிடிக்கவே செய்தது. 
 
இந்நிலையில் தனது மூன்றாவது படத்துக்கு மருது என்று பெயர் வைத்துள்ளார். மருது என்றதும் யாரும் சொல்லாமலே நமக்கு நினைவு வருவது பாண்டியர் என்ற வார்த்தை. இந்தப் படமும் முத்தையாவின் சுயசாதி பெருமையாக இருக்குமா என்ற கேள்வியை இந்தப் பெயர் உருவாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil