ஒரு படத்தின் முதல்காட்சியிலேயே வரிக்குவரி வாட்ஸ் அப்பில் படத்தின் கதையை பதிவேற்றிவிடுகிறார்கள். முதல் காட்சி முடிவதற்குள் படம் மொக்கை, போர், கிட்டவே வராதீங்க என்று சில முந்திக் கொட்டைகள் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன.
இவர்களை நடிகர் சித்தார்த் கண்டித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து விஷாலும் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்துள்ளார்.
ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்குவதற்குள் ஒரு படத்தை கிழிச்சி தொங்க விடாதீர்கள், கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.