Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தூத்துக்குடியில் விஷால்- ஹரி படத்தின் ஷூட்டிங்!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:40 IST)
தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி அடுத்து விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஹரி.

இந்த படத்தின் ஷூட்டிங் முதல் கட்டமாக தூத்துக்குடியில் தொடங்கி நடந்தது. இதற்கிடையில் மார்க் ஆண்டனி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விஷால் வந்த நிலையில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப் பட்டது. இப்போது மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் மீண்டும் தூத்துக்குடியில் ஹரி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

அடுத்த கட்டுரையில்
Show comments