Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாய்களுக்கு கார் ஏற்பாடு செய்த விஷால்

நாய்களுக்கு கார் ஏற்பாடு செய்த விஷால்
, புதன், 25 நவம்பர் 2015 (12:05 IST)
நாட்டில் மனிதாபிமானம் இருக்கிறதோ இல்லையோ... நாயபிமானம் நிறையவே இருக்கிறது. சென்னையின் அடை மழை வெள்ளத்தில் சிக்கிய நாய்களை மீட்க கார் தந்து உதவியிருக்கிறார் நடிகர் விஷால்.


 
 
கேரள அரசு தெரு நாய்களை கொல்வதை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டத்தில் விஷால் கலந்து கொண்டது நினைவிருக்கலாம். அதேபோல், பசுக்களை கொல்லக் கூடாது என்று கோவையில் நடந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொண்டார் (பசுவை கொல்லக் கூடாது என்று குரல் கொடுத்த இவர், பசுக்கறி வைத்திருந்ததாக சந்தேகத்தில் அடித்து கொல்லப்படும் மனிதர்கள் குறித்து இவர் இதுவரை வாய் திறந்ததில்லை)
 
சென்னையின் மழை வெள்ளத்தில் சில நாய்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தகவல் வந்துள்ளது. அந்த நாய்களை மீட்டு மருத்துவ உதவி செய்ய விஷால் கார் ஏற்பாடு செய்து தந்துள்ளார். அதன் பிறகு நாய்களை பத்திரமாக மீட்டு, முதலுதவி செய்து காப்பாற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil