Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லைதாண்டி காதலிக்கும் விக்ரம் பிரபு

எல்லைதாண்டி காதலிக்கும் விக்ரம் பிரபு
, செவ்வாய், 17 பிப்ரவரி 2015 (13:14 IST)
விக்ரம் பிரபு வாகா என்ற படத்தில் நடிப்பதாக ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இதன் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜிஎன்ஆர் குமரவேலன் படத்தை இயக்குகிறார்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவை பெயராக வைத்திருப்பதற்கு காரணம் உண்டு. இது இந்திய இளைஞனுக்கும் பாகிஸ்தான் பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதை. விக்ரம் பிரபு இந்திய இளைஞனாக வருகிறார். பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண்ணாக இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் யார் என்பதை படயூனிட் ரகசியமாக வைத்துள்ளது.
 
காரைக்குடியில் தற்போது பாடல் காட்சியை எடுத்து வருகின்றனர். அது முடிந்த பிறகு அடுத்த மாதம் குலுமணாலி செல்கின்றனர். மொத்தம் 55 நாள்கள் தொடர் படப்பிடிப்பு. சிறப்பு அனுமதி வாங்கி வாகா எல்ஙலைப் பகுதியில் சில காட்சிகளை படமாக்க உள்ளனர். விக்ரம் பிரபு நடித்துள்ள இது என்ன மாயம் வெளியான பிறகு படம் குறித்த பிற தகவல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil