Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் என்னுடைய ஆபீஸில் மதிய உணவு போட போகிறேன்: விஜய் டிவி புகழ் பேட்டி..!

Siva
வெள்ளி, 5 ஜனவரி 2024 (13:45 IST)
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய் டிவி புகழ் இன்று முதல் என்னுடைய அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு மதிய உணவு போட போவதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நான் ஐயா விஜயகாந்த் அவர்கள் இறந்த தினத்தில் அஞ்சலி செலுத்தினேன். இன்று நான் மீண்டும் அஞ்சலி செலுத்த வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜயகாந்த் பசி என்று வருபவர்களுக்கு சோறு போட்டு வழியனுப்பி வைப்பார். நான் அதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

நானே சென்னைக்கு வந்த புதிதில் பக்கோடா, வாட்டர் பாக்கெட் மட்டும் தான் என்னுடைய உணவாக இருந்தது. இந்த நிலையில் விஜயகாந்த் அவர்களின் ஆசியோடு இன்று முதல் நான் என்னுடைய கேகே நகர் அலுவலகத்தில் தினமும் மதிய உணவு போட போகிறேன்.

50 பேர்களில் இருந்து இதை ஆரம்பிக்க போகிறேன். பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு அளிக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விரைவில் வீடியோ போடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

GBU டீசரால் படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு வந்துருச்சு… ஜி வி பிரகாஷ் மகிழ்ச்சி!

பார்பி டால் போல க்யூட் லுக்கில் கலக்கும் தமன்னா!

விஜய் மகன் என்று சொல்லாதீர்கள்… ஜேசன் சஞ்சய்… பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதில் அளித்த நடிகர்!

அந்த மாதிரி ஜோதிகா நடித்துள்ளாரா?.. இந்தி சீரிஸ் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி!

எக்ஸ் தளத்தில் சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்… ஜி வி பிரகாஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments