Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொய்யாக ஒருவரை நேசிக்கத் தெரியாது - புலி விழாவில் விஜய் பேச்சு

பொய்யாக ஒருவரை நேசிக்கத் தெரியாது - புலி விழாவில் விஜய் பேச்சு
, திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (09:40 IST)
புலி படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மகாபலிபுரத்தில் நடந்தது. பாடல்கள் சிடியை விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன் வெளியிட விஜய்யின் மனைவி சங்கீதா பெற்றுக் கொண்டார். 
 
எனக்கு உண்மையாக ஒருவரை வெறுக்கத் தெரியும், ஆனால் போலியாக ஒருவரை நேசிக்கத் தெரியாது என்று விஜய் பேசினார். அவரது பேச்சு -
 
"ஒரு ராஜா காலத்து கதையில் கமர்ஷியல் மாறாமல் ஒரு கதை பண்ண வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்தது. சிம்புதேவன் சொன்ன கதை பிடித்துப் போனதும் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நினைத்ததுபோலவே படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. பொது வாழ்க்கையில் பரீட்சை எழுதுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் மார்க் போடுவது சில பேர்தான். ஆனால், சினிமாவில் பரீட்சை எழுதுவது சில பேர்தான். மார்க் போடுவதற்குத்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் பரீட்சை எழுதியிருக்கிறோம். நீங்கள் தான் தகுந்த மார்க் போடவேண்டும். 
 
சினிமாவில் ஹீரோக்களுக்கு எப்போதுமே நம்பர் 1இ நம்பர் 2 என ஏற்றங்கள் இறக்கங்கள் வரும். ஆனால், சினிமாவில் எப்போதுமே நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் கவிஞர் வைரமுத்துதான்.
webdunia

இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள். அதுதான் கஷ்டப்பட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் செய்த பேருதவியாக இருக்கும். நிறைய தோல்விகளால் நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் நிறைய அவமானங்கள் இருக்கிறது. 
 
அடுத்த நிமிஷம் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்கள வாழ வைத்துதான் பழக்கம். எனக்கு உண்மையா ஒருத்தரை வெறுக்கத் தெரியும். ஆனால், பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது."
 
- இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil